For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உளவு: பாகிஸ்தான் டிரைவர் வெளியேற உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:இந்திய ராணுவ ரகசியங்களை முறைகேடாகப் பெற முன்றது தொடர்பாக பிடிபட்ட பாகிஸ்தான் தூதரகஓட்டுனரை ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஓட்டுனராகப் பணியாற்றுபவர் முகம்மது பரூக். இவர் கடந்த நான்குநாட்களுக்கு முன், இந்திய ராணுவ வீரர் ஒருவரிடமிருந்து சில ரகசிய ஆவணங்களைப் பெற்றார். இதை டெல்லிபோலீஸார் கண்டுபிடித்து இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

முகம்மது பரூக்கிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை பாகிஸ்தான் தூதரகத்திடம் டெல்லி போலீஸார்ஒப்படைத்தனர்.

பரூக் இன்னும் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X