For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்சலில் வந்த குண்டுகள் டமார்-2 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

சின்ன சேலம்:விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தில் தபாலில் வந்த மர்மப் பொருள் வெடித்ததில்2 பேர் படுகாயமடைந்தனர்.

சின்ன சேலத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்திற்கு இரண்டு பார்சல்கள் வந்தன.டிப்சன் மற்றும் அழகேசன் ஆகியோருக்கு அந்த பார்சல்கள் அனுப்பப்பட்டிருந்தன.இதையடுத்து கூரியர் நிறுவன ஊழியர் காசி, அந்த பார்சல்களை சம்பந்தப்பட்டவீடுகளுக்கு டெலிவரி செய்தார்.

பார்சலை வாங்கிய டிப்சனின் மகன் கதிரேசன் பார்சலைத் திறந்து பார்த்தபோது அதுபலத்த சப்தத்துடன் வெடித்தது. பார்சலில் இருந்த செல்போன் சார்ஜர் போன்றபொருள் வெடித்ததால் இந்த விபத்து நடந்தது. இதில் கதிரேசன் படுகாயமடைந்தார்.காயமடைந்த அவர் புதுச்சேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, அழகேசனுக்கு வந்த பார்சலை அவர் பிரித்து பார்த்தபோது அதில்மின்விளக்கு போல இருந்த பொருள் வெடித்தது. இதில் அவரும் காயமடைந்து,கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரு பார்சல்களிலும் அனுப்பியவர் முகவரி இடம்பெறவில்லை. இந்த பார்சல்களைஅனுப்பியது யார், தீவிரவாதிகளா அல்லது அழகேசன், டிப்சனுக்கு வேண்டாதவர்களாஎன்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X