சிறுமியை சீரழித்த சாமிக்கு 10 வருடம் சிறை!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு கங்காபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. சாமியாராக தன்னை அறிவித்துக் கொண்டஇந்த தண்டபாணி அப்பகுதியில் தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி செயல்பட்டுவந்தார்.
கடந்த ஆண்டு வலிப்பு நோய்க்கு இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திவ்யா என்ற 8 வயது சிறுமியை அழைத்துவந்தனர். அப்போது அந்த சிறுமியை சாமியார் தண்டபாணி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு தண்டபாணி கைது செய்யப்பட்டார். அவர் மீது வேலூர்செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பன், தண்டபாணிக்கு 10ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications