அதிமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரிய அதிமுக கூட்டணியினரின் கோரிக்கையைகாவல்துறை நிராகரித்து விட்டது. இதற்கு அதிமுக கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளை கண்டித்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்த மதுரை அதிமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தன.

நவம்பர் 2ம் தேதி (நேற்று) உண்ணாவிரதம் இருக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையிடம்அனுமதி கோரி அதிமுக கூட்டணியினர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர்.

ஆனால் அதிமுக கூட்டணியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி தர காவல்துறை மறுத்து விட்டது.

காவல்துறை அனுமதி தர மறுத்தது தெரியாமல் ஏராளமான அதிமுக தொண்டர்கள், மதிமுகவினர் உள்ளிட்டோர்தல்லாகுளம் தலைமை தந்தி நிலையம் முன்பு கூடியிருந்தனர். உண்ணாவிரதத்திற்கு அனுமதி கிடைக்கவில்லைஎன்று அவர்களுக்குத் தெரிய வந்தபோது கோபமடைந்த அவர்கள் போலீஸாரைக் கண்டித்து கோஷமிட்டனர்.

போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதது குறித்து அதிமுக, மதிமுக, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்டகூட்டணிக் கட்சியினர் அதிமுக நகர் மாவட்ட அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மூ.மு.மு தலைவர் டாக்டர் சேதுராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 27ம் தேதியேவிண்ணப்பித்து விட்டோம். இந்த நிலையில் 1ம் தேதி இரவு அனுமதி மறுப்பதாக காவல்துறை கூறுகிறது. இதுகண்டனத்துக்குரியது.

திட்டமிட்டபடி போராட்டம் நடத்துவோம், சிறை செல்லவும் தயாராக உள்ளோம் என்றார் சேதுராமன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+