தமிழகத்தில் ஐபிஎம் ரூ. 9,000 கோடி முதலீடு
சென்னை:முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம். தமிழகத்தில் ரூ. 9000 கோடி முதலீட்டில் இரண்டு திட்டங்களைநிறைவேற்ற உள்ளது.
ஐ.பி.எம். அறக்கட்டளைத் தலைவர் ஸ்டேன்லி லிட்டோ நேற்று சென்னைக்கு வந்தார். மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் புதிய சாப்ட்வேர் மையம் அமைக்கப்படும்.இதன் மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சென்னையில் அமைக்கப்படும் 4வது மையம் இது. 2007ம் ஆண்டிலிருந்து இது செயல்படத் தொடங்கும்.
இதேபோல இந்தியாவில் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய போதனைத் திட்டத்தையும் மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிஅளிக்கப்படும்.
உள்ளூர் தரமுறைகளுக்கு ஏற்ப, உலகத் தரத்தில் அமைந்த பாடத் திட்டங்களை ஐபிஎம் நிறுவனம்,ஆசிரியர்களும் கூட்டாகத் தயாரிப்பார். இரு திட்டங்களுக்கும் மொத்தமாக ரூ. 9000 கோடி முதலீடுசெய்யப்படவுள்ளது என்றார் லிட்டோ.












Click it and Unblock the Notifications