நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தன்னைப் பார்த்து குரைத்த நாயை துப்பாக்கிாயல் சுட்டவரை போலீஸார்கைது செய்தனர்.
மயிலாடுதுறை, பட்டமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன். இவரது மகன் செல்வம். அவரது வீட்டில்நாய் வளர்த்து வருகிறார்கள்.
செல்வத்தின் வீட்டு வழியாக முருகேசன் என்பவர் நடந்து சென்றபோது நாய் குரைத்துள்ளது. இதனால்ஆத்திரமடைந்த முருகேசன், தனது கையில் இருந்த குருவி சுடும் துப்பாக்கியால் நாயை சுட்டார். இதனால் நாயின்முதுகுப் பகுதியில் 2 குண்டுகள் பாய்ந்து அது துடித்தது.
நாய் சத்தம் கேட்டு செல்வத்தின் மனைவி சாவித்திரி வெளியே வந்தார். நாயை காப்பாற்ற முயற்சித்தார்.அப்போது அவரது கையிலும் குண்டு பாய்ந்தது.இதையடுத்து நாயும், சாவித்திரியும் மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டனர். நாயை துப்பாக்கியால் சுட்டமுருகேசனை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications