மின்னல் தாக்கி 2 மாடி ஹோட்டல் இடிந்தது

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:பெரம்பலூர் நகரிபில் கன மழை மற்றும் மின்னல் தாக்கியதில் 2 மாடி ஹோட்டல் ஹோட்டல் இடிந்துதரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பெரம்பலூரில் நேற்று கன மழை பெய்தது. மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்ததால் நகர் முழுவதும்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.

இந்த கன மழைக்கு 2 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. பேருந்ததுநிலையம் அருகே இந்த ஹோட்டல் உள்ளது. மிகவும் பழைய கட்டடமான அது, பலத்த இடி விழுந்ததால் இடிந்துவிழுந்தது.

கட்டடம் அதிர்ந்து மேல் சுவரிலிருந்த காரை பெயர்ந்து விழுந்ததைப் பார்த்ததும் ஹோட்டல் அதிபர் குருவாரெட்டி, ஊழியர்கள், சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்படி வெளியேறி விட்டனர்.

அதற்கு அடுத்த சில விநாடிகளில் கட்டடம் பொலபொலவென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச் சேதமோ,யாருக்கும்காயமோ ஏற்படவில்லை.

சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அணில் மேஷ்ராம் மற்றும் வருவாய் அதிகாரிகள்,காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இன்று காலை வரை இடிபாடுகளில் பாதி அகற்றப்பட்டுள்ளது. மீதம் அகற்றப்பட்டால் தான் யாரும் உள்ளேசிக்கியிருக்கார்களா என்பது தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+