சிவனாண்டி: தீர்ப்பாய உத்தரவுக்கு தடை!
டெல்லி:சிவானண்டிக்குப் பதவி உயர்வு கொடுப்பதற்காக மாநில அரசு தயாரித்த பணி மூப்பு பட்டியலை ரத்து செய்துசென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் புலனாய்வுத்துறை எஸ்.பியாக இருந்தவர் சிவனாண்டி. அவருக்கு டிஐஜி பதவி உயர்வுகொடுக்க முடிவு செய்த அதிமுக அரசு, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை புறம் தள்ளி விட்டு புதிய பதவி உயர்வுப்பட்டியலை தயாரித்தது.
இதை எதிர்த்து சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்குதொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பதவி உயர்வுப் பட்டியலை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து டிஐஜி பதவியிலிருந்து எஸ்.பியாக பதவி இறக்கம் செய்யப்பட்டார் சிவனாண்டி.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிவனாண்டி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடியானது. இதைஎதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார் சிவனாண்டி. அந்த மனுவை நேற்றுவிசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.மேலும் சிவனாண்டி மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும்உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications