சர்ச்சை நடுவர் டேரல் ஹேருக்கு ஐசிசி தடை
மும்பை:சர்ச்சைக்குரிய ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர், சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.
இங்கிலாந்தில் பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடந்த 4வது டெஸ்ட் போட்டியின்போதுபாகிஸ்தான் வீரர்கள், பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டினார் ஹேர். இதனால் கோபமடைந்த பாகிஸ்தான்அணி போட்டியை தொடர்ந்து விளையாடாமல் வெளிநடப்புச் செய்தது. இதனால் அப்போட்டியில் இங்கிலாந்துவெற்றி பெற்றதாக அறிவித்தார் நடுவர் ஹேர்.
இந்தப் பிரச்சனை பெரும் சர்ச்சையக் கிளப்பியது. ஹேர் கூறியது போல பாகிஸ்தான் வீரர்கள் பந்தைசேதப்படுத்தவில்லை என்பது டிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இதனால் ஹேர் பெரும் சிக்கலில் மாட்டினார்.
இந்த நிலையில் ஹேரை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இதுகுறித்துமும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஐசிசி தலைவர் பெர்சி சோன், பாகிஸ்தான், இங்கிலாந்து இடையிலான4வது டெஸ்ட் போட்டி விவகாரம் குறித்து ஐசிசியின் 2 நாள் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாகவிவாதிக்கப்பட்டது.
விவாதத்தின் இறுதியில் ஹேர் மீதான நம்பிக்கை முற்றிலும் குறைந்து விட்டதாக அனைவரும் கருத்துதெரிவித்தனர். எனவே இனிமேல் அவரை சர்வதேச போட்டிகளில் ஈடுபடுத்துவதில்லை என்ற முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
ஹேருடன் ஐசிசிக்கு 2008ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஐசிசியின் கிரிக்கெட் விவகார மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் ஹேரை சந்தித்து இதுகுறித்துப்பேசுவார் என்றார் சோன்.