ஜெ வீட்டுக்கு பெரிய கத்தியுடன் வந்த நபர்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு மிகப் பெரிய கத்தியுடன் வந்துஜெயலலிதாவுக்கு எதிராக கோஷம் போட்ட நபர் காரில் தப்பியோடிவிட்டார்.
இன்று காலை ஒரு நபர் ஜெயலலிதா வீட்டருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். இதையடுத்துமப்டி உடையில் அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் அவரை கண்காணித்தனர். அவரிடம் பெரிய கத்திஇருப்பதை போலீசார் பார்த்தனர்.
திடீரென அந்த நபர் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷம் போட்டபடி வீட்டின் வாயிலை நெருங்கினார்.இதையடுத்து அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தப்பியோடினார்.
அவரை போலீசார் விரட்டிச் சென்றனர். ஆனால், அவர் அங்கு வந்த காரில் தப்பியோடிவிட்டார்.
இச் சம்பவம் நடந்தபோது ஜெயலலிதா வீட்டில் இல்லை. அவர் சிறுதாவூர் பண்ணை வீட்டில் தோழிசசிகலாவுடன் கடந்த 4 நாட்களாக ஓய்வெடுத்து வருகிறார்.
இச் சம்பவத்தால் போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் அந்த நபரை தேடிவருகின்றனர்.