தமிழக விமான நிலையங்களுக்கு குண்டு மிரட்டல்
திருச்சி:தமிழக, கேரள விமான நிலையங்கள் கார் குண்டுகள் மூலம் தகர்ப்படும் என அல்-கொய்தா இயக்கத்தின்பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமானநிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அந்த மிரட்டல் கடிதத்தில்,
டெல்லி, மும்பை, கேரள, தமிழக விமான நிலையங்களை குண்டுவைத்துதகர்க்கப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுஉத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமானநிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் போலீஸார் சோதனைகளைமேற்கொண்டுள்ளனர்.
மேலும் விமான நிலையங்களுக்கு வரும் வாகனங்களை கட்டுப்படுத்தவும்,சோதனையிடவும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரண் கூறுகையில், நகரில் வாகன கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் நுழையும் எல்லாவாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.
எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு உள்பட மக்கள் அதிக அளவில் கூடும்இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.