விஷ நெல்லைப் பிடுங்கிய விவசாயிகள் மீது வழக்கு
கோவை:கோவை அருகே நச்சுத்தன்மை வாய்ந்த அமெரிக்க விஷ நெல்லைப் பிடுங்கி எறிந்த விவகாரம் தொடர்பாகதமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து உள்ளிட்ட விவசாயிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவை அருகே ராமநாதபுரம் கிராமத்தில், தனியார் விதை நிறுவனம், மரபியல் ரீதியாக மாற்றப்பட்ட விதைநெல்லை பரீட்சார்த்த முறையில் பயிரிட்டிருந்தது. இந்த வகை நெல்லால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படுவதாககூறி பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கான பேர் திரண்டு சோதனைமுறையில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை பிடுங்கி எறிந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து உள்ளிட்ட விவசாயிகள் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்து மீறி தனியார் இடத்திற்குள் நுழைதல், சொத்துக்களுக்கு சேதம்விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.