முரசொலி மாறன் நூல்கள் கல்லூரிக்கு அன்பளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பயன்படுத்தி வந்த 8000க்கும் மேற்பட்ட நூல்கள், சென்னைலயோலா கல்லூரிக்கு அன்பளிப்பாக தரப்பட்டது.

மறைந்த மத்திய அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக விளங்கியவருமான முரசொலிமாறன் சிறந்த புத்தகப் பிரியர். எந்த ஊருக்குச் சென்றாலும் சில புத்தகங்களை வாங்காமல் வர மாட்டார்.

தமிழ் இலக்கியம், பண்பாடு, திராவிட இயக்கம், பொருளாதாரம் என பல வகை நூல்களை விரும்பிப் படித்தவர்.

மாறன் பயன்படுத்திய புத்தகங்களின் எண்ணிக்கை 8000க்கும் மேல் இருந்தன. இந்தப் புத்தகங்களை சென்னைலயோலா கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்க மாறனின் மனைவி மல்லிகா மாறன் முடிவு செய்தார். இந்தக்கல்லூரியில்தான் கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இந்தப் புத்தகங்களை வைப்பதற்காக ஒரு நூலகக் கட்டடத்தையும் மல்லிகா மாறன்குடும்பத்தினர் கட்டிக் கொடுத்துள்ளனர். இந்த நூலகத்திற்கு முரசொலி மாறன் ஆய்வு நூலகம் என்றுபெயரிடப்பட்டுள்ளது.

இந்த நூலகக் கட்டடத்தை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று திறந்து வைத்து புத்தகங்களையும்அன்பளிப்பாக வழங்கினார். நிகழ்ச்சியில், லயேலோ கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை, விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+