திருக்குறள்-அதிமுக பொய் பிரச்சாரம்: கருணாநிதி
சென்னை:திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதைப் பொறுக்க முடியாமல்,மக்களை திசை திருப்புவதற்காக அரசுப் பேருந்துகளில் திருக்குறள் அழிக்கப்பட்டுவருவதாக அதிமுகவினர் பொய் பிரசாரம் செய்வதாக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த திருக்குறளை அழித்து விட்டுகருணாநிதியின் பொன் மொழிகள் எழுதப்பட்டு வருவதாகவும், அதை கண்டித்துபோராட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதி கூறியிருப்பதாவது:
திமுக அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றிவருகிறது. இதைப் பொறுக்க முடியாமல், மக்களை திசை திருப்புவதற்காகவே, அரசுப்பேருந்துகளில் திருக்குறள் அழிக்கப்பட்டு வருவதாக அதிமுகவினர் பொய்ப் பிரசாரம்செய்து வதந்தி பரப்புகிறார்கள்.
அரசுப் பேருந்துகளில் முதல் முறையாக 1968ம் ஆண்டு திருக்குறளை இடம் பெறச்செய்ததே திமுக அரசுதான்.
நீலகிரி மலையில், மண் சரிவில் சிக்கி இறந்த லாரி கிளீனர் குடும்பத்துக்கு ரூ. 50,000நவாரண நிதியை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலைச் சரிவைசீர்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications