அருணாச்சல் எங்களுக்கே சொந்தம்-சீனா
டெல்லி:அருணாச்சல் பிரதேசம் மாநிலம் சீனாவுக்குச் சொந்தமானது என்று இந்தியாவுக்கான சீனதூதர் சூன் யூக்ஸி கூறியிருப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுமையும் சீனாவுக்குச் சொந்தமான பகுதி என்று யூக்ஸிசீனத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு மத்தியஅரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிஅருணாச்சல் பிரதேசம் என்பதில் எந்தவித சந்தேகம் சீனாவுக்குத் தேவையில்லை.அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம்.
சீன தூதரின் பேச்சு கண்டனத்துக்குரியது. இது தேவையற்ற பேச்சு என்றார் முகர்ஜி.இதேபோல, அருணாச்சல் பிரதேச மாநில ஆளுநர் எஸ்.கே.சிங்கும் சீனத் தூதரின்பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முரட்டுத்தனமாக பேசுவதே சீனர்களின் வாடிக்கையாகபோய் விட்டது. இதற்கு முன்பும் இதுபோல பேசியுள்ளனர். இப்போதும் அதுபோலவேபேசியுள்ளனர். இது கண்டனத்துக்குரிய பேச்சு என்றார்.
சீன அதிபர் ஹூ ஜின்டாவோ வருகிற 20ம் தேதி இந்தியா வருகிறார் 23ம் தேதி வரைஅவர் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் சீன தூதர், அருணாச்சல் பிரதேசம்சீனாவுக்குச் சொந்தமானது என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.