இந்தியா உலக சக்தியாக மாறும்: இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்:உலக அளவில் பெரும் சக்தியாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவுடன் நெருங்கியஉறவு வைத்துக் கொள்ள இங்கிலாந்து தீவிரமாக உள்ளது என்று அந்நாட்டுவெளியுறவுத் துறை செயலாளர் மாகரெட் பெக்கட் கூறியுள்ளார்.

தொழிலாளர் கட்சியின் இந்திய நண்பர்கள் என்ற அமைப்பின் வருடாந்திர கூட்டம்லண்டனில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பெக்கெட் பேசுகையில்,

உலக அளவில் பெரும் சக்தியாக, வலுவான நாடாக இந்தியா உருவாகி வருகிறது.இதனால் இந்தியாவுடனான உறவுக்கு இங்கிலாந்து முக்கியத்துவம் தந்து வருகிறது.

இந்தியா மற்றும் சீனாவை தவிர்த்துவிட்டு இனி எந்த நாடும் இருக்க முடியாது. இந்தஇரு நாடுகளும் சீரான, வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

எனது சமீபத்திய இந்திய விஜயத்தின்போது பொருளாதார ரீதியாகவும், சமூக,கலாச்சார ரீதியாகவும் இந்தியா எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்பதை உணரநேரடியாகவே முடிந்தது.

ஜனநாயகம், சகிப்புத்தன்மையின் காப்பாளராக இந்தியா விளங்குகிறது. ஐ.நா.பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும்.

இந்த ஆண்டு 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்றுவருகின்றனனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இது 3,000 ஆக இருந்தது.

இங்கிலாந்தின் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் விருப்பமான மாணவர்களாகஇந்திய மாணவர்கள் விளங்குகின்றனர். அந்த அளவுக்கு படிப்பில் சக்கை போடுபோடுகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+