மாகராட்சி தேர்தல் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்கக் கோரி அதிமுக மற்றும் பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்டவழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. எனவே நடந்த தேர்தலைரத்து செய்து விட்டு மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார்சார்பிலும், பாஜக சார்பிலும் தனித் தனியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில்மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பிலான வழக்கறிஞர்களின்வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications