சென்னை மெட்ரோ ரயில்: டெல்லியில் பரிதி
டெல்லி:சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, டெல்லிமெட்ரோ ரயில் கழகம் தயாரித்து வரும் திட்ட ஆய்வறிக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரிமாதத்திற்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்துள்ள பரிதிஇளம்வழுதி செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில்மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில்கழகத்திடம் விரிவான ஆய்வறிக்கையை கோரியிருந்தோம். அந்த அறிக்கை அடுத்தஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
அடுத்த வாரம் டெல்லி மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரன் சென்னைவருகிறார். முதல்வர் கருணாநிதியையும், உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப்பேசவுள்ளார்.
சென்னை நகரில் மொத்தம் 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம்நிறைவேற்றப்படும். சென்னை நகரை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில்இந்தத் திட்டம் அமையும் என்றார் பரிதி.
முன்னதாக டெல்லி மெட்ரோ ரயிலில் பரிதி இளம்வழுதி பயணம் செய்து ரயில்போக்குவரத்து குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கும்அவர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தமிழக அரங்குகளை அவர் சுற்றிப்பார்த்தார். தமிழக அரசின் 14 துறைகள் சார்பில் இங்கு அரங்குகள்அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications