பாபநாசம் அணை திறப்பு: தாமிரபரணியில் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:பாபநாசம் அணை திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம்வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது.நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் வேகமாகநிரம்பி வருகின்றன.

Papanasam Dam
இந்த நிலையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140 அடியைத் தொட்டது. அணை நிரம்ப இன்னும் 3 அடியேஉள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை நேற்று நள்ளிரவில் திறக்கப்பட்டது.

இரவு 1 மணியளவில் அணை அவசரம் அவசரமாக திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல சேர்வலாறு அணையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரும் தாமிரபரணியில்தான் கலக்கும் என்பதால்நெல்லை, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவ உள்ளிட்ட ஊர்களில் தாமிரபரணிக் கரையோரம் வசிக்கும் மக்கள்அவசரம் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் முழு உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க உரிய முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது.மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் இரவு மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+