For Daily Alerts
Just In
மதிமுக பிரமுகரை கொன்ற பாமக தொண்டர்
சென்னை:சென்னை அருகே மதிமுக பிரமுகரை கொலை செய்த பாமக தொண்டரை போலீஸார்தேடி வருகிறார்கள்.
சென்னை அருகே போரூரைச் சேர்ந்தவர் தென்றல். இவர் திருவள்ளூர் மாவட்டமதிமுக பிரமுகர் ஆவார்.
இவரும் பாமகவைச் சேர்ந்தவரும், திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டருமான செந்தில்என்பவரும் சேர்ந்து நேற்றிரவு மது அருந்தியுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போதுசெந்தில் தன்னிடமிருந்த அரிவாளால் தென்றலை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு ஓடினார்.
தலைமறைவாகி விட்ட செந்திலை போலீஸார் தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Monday, November 20, 2006, 5:30 [IST]