தமிழகம்-சாலைகளை சீர் செய்ய ரூ.848 கோடி
சென்னை:தமிழகத்தில் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ரூ. 848 கோடியைமுதல்வர் கருணாநிதி ஒதுக்கீடு செய்து பணிகளை உடனடியாக மேற்கொள்ளஉத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக நிதித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம்முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் நடந்தது. இதில் நிதித்துறைஅமைச்சர் அன்பழகன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில்சாமிநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், தலைமைச் செயலாளர்திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில், 1079 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மாநிலநெடுஞ்சாலைகளை ரூ.284 கோடியிலும், 1390 கிலோமீட்டர் தொலைவிலானமாவட்ட முக்கியச் சாலைகளை ரூ.295 கோடியிலும், 1355 கிலோமீட்டர்தொலைவிலான மாவட்ட இதர சாலைகளை ரூ.143 கோடியிலும் சீரமைக்கும்பணியை உடனடிாயக மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார்.
இதுதவிர ஆதி திராவிடர் குடியிருப்புகள் வழியாக செல்லும் சாலைகளை ரூ.126கோடியில் மேம்படுத்தும் பணிக்கும் முதல்வர் ஒப்புதல் அளித்தார். மொத்தமாக ரூ.848 கோடி செலவில் இந்த சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.