மாணவிகளிடம் சில்மிஷம்-ஆசிரியர் சஸ்பெண்ட்
சென்னை:மாணவிகளிடம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர் சுப்புராஜ், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தஆசிரியை விஜயா ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும்மேற்பட்ட மாணவிகள் தாங்களை ஆசிரியர் சுப்புராஜ் தினமும் எங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார்.அவருக்கு உதவியாக ஆசிரியை விஜயா இருக்கிறார் என கடந்த சில தினங்களுக்கு முன் புகார் கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதை அறிந்த ஆசிரியர் சுப்புராஜ்,ஆசிரியை விஜயாவும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து போலீசார் மாணவிகளிடமும் விசராணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அவசரக் குழு கூட்டம் கூட்டி புகார் கூறப்பட்டுள்ள ஆசிரியர் சுப்பராஜ், ஆசிரியைவிஜயா இருவரையும் நிர்வாக ரீதியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications