வசுந்தரா ராஜேவின் கேட் வாக்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில பாஜகமுதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா, கதர் உடை அணிந்துபேஷன் ஷோவில் நடை போட்டதற்கு காந்தியவாதிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கதர் மற்றும் கைத்தறி ஆடைகளைபிரபலப்படுத்துவதற்காக ஆடை அலங்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்ச்சியில் ரக்சல் என்ற ஆடை வடிவமைப்பாளர் டிசைன்செய்திருந்த ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கதர் ஆடைகள் அணிந்து பலர் கலந்து கொண்ட கேட்வாக்கும் நடந்தது. இதில் முதல்வர் வசுந்தராவும் கதர் ஆடை அணிந்தபடி மேடையில்நடைபோட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் கல்லா, கதர்ஆடை அணிந்தபடி கேட் வாக் செய்தது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
பிரபல காந்தியவாதியும் மாநில கதர் அமைப்பின் தலைவருமான லட்சுமிகாந்த்பண்டாரி கூறுகையில், கைகளால் மட்டுமே காதி ஆடைகளை தயாரிக்க வேண்டும்.அப்போதுதான் கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பது மகாத்மாகாந்தியின் கொள்கை. ஆனால் இதுபோன்ற கண்காட்சிகளில் இயந்திரங்கள் மூலம்உற்பத்தி செய்த காதி ஆடைகள்தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
இப்படிப்பட்ட ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியை ஒரு மாநிலத்தின் முதல்வர்இவ்வாறு நடைபோட்டு பிரபலப்படுத்த முயல்வது சரியல்ல என்றார்.
ஆனால் இந்தக் கண்டனங்களை வசுந்தரா ஏற்றுக் கொள்ளவில்லை. காதி ஆடைகளைபிரபலப்படுத்தும் முயற்சியை இந்த நிகழ்ச்சி. அதில் நான் கலந்து கொண்டால் காதிஆடைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்பதால்தான் நான் கேட் வாக்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இதை தவறு என்று கூறுவதை ஏற்க முடியாது என்கிறார்மகாராணி வசுந்தரா.












Click it and Unblock the Notifications