சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 5 நீதிபதிகள்
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 5 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்திற்குஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா பரிந்துரைத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்தம் 49 நீதிபதிபணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 44 நீதிபதிகள் வரை உள்ளனர். 5பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக ஐந்து பேரின்பெயர்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள்: மாவட்ட நீதிபதிகளான சுதந்திரம்,வீரராகவன், நாகமுத்து, உயர்நீதிமன்ற பதிவாளர் பழனிவேலு உள்ளிட்ட 5 பேர்.
இவர்களது பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அத்துறையின்கருத்தை உச்சநீதிமன்றம் கேட்கும். அதன் பின்னர் இவர்களை நீதிபதிகளாகநியமிக்கலாம் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் புதிய நீதிபதிகளை நியமித்து உத்தரவிடுவார்.இன்னும் ஒரு மாதத்திற்குள் இவர்களின் நியமனங்கள் குறித்த குடியரசுத் தலைவரின்அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications