முருகன் கோவிலில் சுரங்கம் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் உள்ள பழம்பெரும் முருகன்கோவிலுக்குள் ஒரு சுரங்கப் பாதையும், இரண்டு அறைகளும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வல்லக்கோட்டை முருகன் கோவில் வட மாவட்டங்களில் பிரபலமான முருகன்தலமாகும். இங்கு கோவில் வளாகத்தில், பூமிக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதைஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக ஆய்வாளர் திருமூர்த்திகூறுகையில்,
1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் மண்டபம்கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோல எந்தக் கோவிலிலும் சுரங்கப் பாதை இருப்பதாகத்தெரியவில்லை.
இந்த சுரங்கப் பாதைக்குள் சுடு மண்ணால் கட்டப்பட்ட இரண்டு அறைகளும் உள்ளன.இந்த சுரங்கப் பாதை குறித்தும், அதன் அறைகள் குறித்தும் மேலும் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் திருமூர்த்தி.
வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை இந்த புதிய சுரங்கம்கவர்ந்திழுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications