For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு வழியாக நகர்ந்தது புயல் சின்னம்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:வங்கக் கடலில் தமிழகத்துக்கு அருகே கடந்த 13 நாட்களாக ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகர்ந்துசென்று விட்டதாக வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே கடந்த 13நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நலை கொண்டிருந்தது. இதனால்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை கொட்டித் தீர்த்தது.

மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஆறுகள் நிரம்பி வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் புயல் சின்னம் தற்போது நகர்ந்து இலங்கையின் கிழக்கில் நிலைகொண்டுள்ளது. இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கன மழை பெய்யக் கூடும் எனவானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X