தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரிப்பு: பாஜக
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருவதாக பாஜக தலைவர்இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் தீவிரவாதசெயல்கள் அதிகரித்து விட்டன. நக்சலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகளின்நடமாட்டம் பெருகி விட்டது.
சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறைக்கு மாநில அரசு அதிக அதிகாரங்களை வழங்கவேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டதிமுக அரசு தவறி விட்டது. இந்த விஷயத்தில் தனது கடமையை செய்ய முதல்வர்கருணாநிதி தவறி விட்டார்.
142 அடியாக உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை கருணாநிதிவலியுறுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications