திருமணம்?-அரசு ஊழியர்களுக்கு புது கட்டுப்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:அரசு ஊழியர்கள் இல்லத்தில் திருமணம் நடைபெறும்போது வரதட்சணைவாங்கவில்லை என்று உத்தரவாதப் பத்திரம் எழுதித் தர வேண்டும் என தமிழக அரசுபுதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருஅரசு ஊழியரும், அவராக இருந்தாலும் சரி, அவரது குடும்பத்தினராக இருந்தாலும் சரிவரதட்சணை வாங்கக் கூடாது.
திருமணத்திற்குப் பின்னர் தான் (அல்லது தனது குடும்பத் திருமணத்தில்) வரதட்சணைவாங்கவில்லை என்று தங்களது துறைத் தலைவரிடம் எழுதிக் கொடுக்க வேண்டும்.அதில் அவரது மனைவியும் கையெழுத்திட வேண்டும்.
அரசு ஆசிரியர்களாக இருந்தால் தங்களது தலைமை ஆசிரியரிடம் இந்தஉறுதிமொழிப் பத்திரத்தை வழங்க வேண்டும் என்று அரசாணை தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications