மத்திய போலீஸ் பாதுகாப்பு கோரும் தமிழகம்
சென்னை:முல்லைப் பெரியாறு அணையில் உள்ள கேரள போலீஸாரை நீக்கி விட்டு அங்குமத்திய போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர்மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில்உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய அரசின் அனுமதியின்றிகடற்படை அலுவலர்களை கேரள அரசு அனுப்பியது.
முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையால் கேரள அரசின் இந்த முயற்சிமுறியடிக்கப்பட்டது. எனினும் அணையின் பலத்தை சோதிப்பதற்காக காலரிபகுதியைத் திறந்து விட மறுத்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும்கண்காணிப்பாளரை இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் அணைப் பகுதியில் உள்ள தமிழக அரசு அலுவலர்களின் உயிர்களுக்கும்,உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.
இந் நிலை தொடராமல் இருக்க அணைப் பகுதியில் தற்போது பாதுகாப்புக்கு உள்ளகேரள போலீஸாரை நீக்கி விட்டு, மத்திய ரிசர்வ் போலீஸை, பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்த வேண்டும்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் துரைமுருகன்.