கலர் டிவி-5 நிறுவனங்கள் தயாரித்து வழங்கும்!
சென்னை:தமிழக அரசின் இலவச கலர் டிவித் திட்டத்திற்குத் தேவையான டிவிகளை 5நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலவச கலர் டிவி திட்டத்தின் கீழ் 25 லட்சம் டிவிகளை தயாரித்து வழங்குவதுதொடர்பாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட டெண்டரைக் கோரி ஏராளமானநிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
இவற்றில் உ.பி. மாநிலம் நோய்டாவைச் சேர்ந்த டிக்சன் நிறுவனம் உள்பட மொத்தம் 9நிறுவனங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன.டிக்சன் நிறுவனம் தான் குறைந்தபட்ச கட்டணத்தை கொடுத்திருந்தது.
அந்தத் தொகையை மேலும் குறைத்து ஒரு டிவி ரூ. 2,740க்குத் தயாரித்து வழங்கடிக்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதே தொகைக்கு டிவிகளை தயாரித்துவழங்க 4 நிறுவனங்கள் மறுத்து விட்டதால் அவை பரிசீலனைப் பட்டியலிலிருந்துநீக்கப்பட்டன. மற்ற 4 நிறுவனங்கள் அரசின் விலைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து டிக்சன் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் அரசுக்குத் தேவையானடிவிகளை தயாரித்து வழங்க ஆர்டர் தரப்படவுள்ளது.
டிக்சன் நிறுவனம் 9 லட்சம் டிவி பெட்டிகளை தயாரித்து வழங்கும். வீடியோகான்நிறுவனம் 6 லட்சம் டிவிகளையும், கிச்சன் அப்ளையன்ஸஸ் நிறுவனம் 3 லட்சம்டிவிகளையும், எல்.ஜி. நிறுவனம் 2 லட்சம் டிவிகளையும், ஏர் விஷன் இந்தியாநிறுவனம் 2 லட்சம் டிவிகளையும் தயாரித்து வழங்க ஆர்டர் தரப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications