புழலுக்கு மாறுகிறது சென்னை மத்திய சிறை
சென்னை:சென்னை அருகே புழல் பகுதியில் நவீன முறையில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைக்கு,சென்னை மத்திய சிறைச்சாலை இடம் பெயருகிறது. இதனை ஞாயிற்றுக்கிழமைமுதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
சென்னை மத்திய சிறை தற்போது சென்டிரல் ரயில் நிலையம் அருகே கூவம்நதிக்கரையோரம் (சாக்கடை) உள்ளது. மிகவும் நெருக்கடியான இடத்தில் உள்ளமத்திய சிறையில் அதிக கைதிகளை அடைத்து வைக்க முடியாத நிலை உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை அருகே புழல் என்ற இடத்தில் புதிய சிறைச்சாலைகட்டப்பட்டு வந்தது. ரூ. 77 கோடி செலவில் 212 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைச்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட அதி நவீன வசதிகளுடன், வித்தியாசமானவடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த சிறை வளாகத்தில் தண்டனை பெற்றகைதிகளுக்கும், விசாரணைக் கைதிகளுக்கும் தனித் தனியாக கட்டடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்காக தனி பிரிவும் உள்ளது.
இங்கு 3,000 கைதிகளை அடைக்கலாம். கைதிகளின் அறைகளில் மின் விசிறிவசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நூலகம், தொழிற் கூடங்கள், பூங்காக்கள்,உடற்பயிற்சிக் கூடம், பள்ளிக் கூடம், கம்ப்யூட்டர் அறைகளும் இடம் பெற்றுள்ளன.
உள்ளேயே ஒரு நீதிமன்றமும் நிறுவப்பட்டுள்ளது. அதி நவீனமாக கட்டப்பட்டுள்ளஇந்த சிறை வளாகத்தை முதல்வர் கருணாநிதி நாளை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர்திரிபாதி, உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா, டிஜிபி முகர்ஜி, சிறைத்துறை ஐஜிபாலச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
சிறை திறப்பு விழாவையொட்டி மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் புழல்சிறை வளாகத்தை சுற்றிப் பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்.
புழல் சிறை திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் பழைய மத்திய சிறை வளாகத்தில் உள்ளஅத்தனை கைதிகளும் இங்கு கொண்டு வந்து அடைக்கப்படுவர்.












Click it and Unblock the Notifications