For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடற்படை தலையிட்டது ஏன்?: வைகோ ஆவேசம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:யாருடைய தைரியத்தில் இந்திய கடற்படை முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யச் சென்றது என்பதுகுறித்து விசாரிக்க வேண்டும் என பிரதமரிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் கோரிக்கைவிடுத்தார்.

டெல்லியில் பிரதமரை சந்தித்த வைகோ அவரிடம் தந்த மனுவின் விவரம்:

தமிழகத்துச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த விடமாட்டோம் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பெயரளவில் வேண்டுமானால் காம்ரேடாக (கம்யூனிஸ்டாக)இருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை அவரால் ஒருக்காலும்சகித்துக் கொள்ளவில்லை. முல்லை பெரியாறு அணையில் உள்ள நீரைப் பெறுவதற்கு999 ஆண்டுகள் ஒப்பந்தம் உள்ளது. அந்த உரிமையைதான் கேட்கிறோம்.

அச்சுதானந்தனின் வேண்டுகோளின் பேரில் இந்திய கடற்படையினர் அணையின் நீர் அழுத்தத்தைஅளப்பதற்காக வந்து போயுள்ளனர். இது மத்திய அரசின் உரிமைகளை நசுக்குகின்ற, இன்னொரு மாநிலத்தின்உரிமையில் தலையிடுகின்ற செயலாகும்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும் செயல் இது. கேரள முதல்வரின் ஆணையை ஏற்றுஇச்செயலில் கடற்படையினர் ஈடுபட்டது மிகவும் வருந்தத்தக்கது. கடற்படையினர்ஏன் அணையை ஆய்வு செய்யச் சென்றார்கள்? யாருடைய தைரியத்தில் இவ்வாறுசென்றார்கள் என்பது குறித்து பிரதமர் விசாரிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல், இந்திய ஒருமைப்பாடுகேள்விக்குறியாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் நீரின் உயரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறியாமல் இரு மாநிலமுதல்வர்களுக்கும் இடையே டெல்லியில் பேச்சு நடப்பது என்பது எந்த பயனையும் அளிக்காது.

நீரின் மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். தமிழகத்துக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டினால் தமிழத்தின் ஐந்து தென்மாவட்டங்கள்பஞ்சப் பிரதேசங்கள் ஆகிவிடும் என்று கூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X