பாஜக தலைவராக ராஜ்நாத் மீண்டும் தேர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலகினார். இதைத் தொடர்ந்துமுன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்நாத் சிங் புதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம்முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

ராஜ்நாத் சிங்கையே மீண்டும் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதரவுதெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.

இந்த நிலையில் இன்று காலை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ராஜ்நாத் சிங் தொண்டர்கள் புடைசூழ வந்துவேட்பு மனு தாக்கல் செய்தார். அவரைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் ராஜ்நாத் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும்அதிகாரியான ஓ.பி.கோலி அறிவித்தார். மொத்தம் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும்,அத்தனையும் ராஜ்நாத் சிங்குக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் இருப்பார். இதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங்குக்குமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்துவாழ்த்து தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+