முதுமலையில் யானை சவாரி திடீர் ரத்து
முதுமலை:நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானை சவாரியும், யானைகள் விநாயகருக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று முதுமலை. இங்குள்ள யானைகள் சரணாலயம்சுற்றுலாப் பயணிகளின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகும்.
முதுமலை சரணாலயத்தில், யானை சவாரி அனைவரையும் கவர்ந்ததாகும். அதேபோல, தெப்பக்காடு என்றஇடத்தில் யானைகள் விநாயகர் கோவிலில் பூஜை செய்வதும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாக அமையும்.
தற்போது இந்த இரு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.இதனால் யானை சவாரியையும், யானைகள் பூஜை செய்வதையும் பார்க்க விரும்பி வரும் சுற்றுலாப் பயணிகள்பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இங்கு வந்து ஏமாறுவதை விட கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்லத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications