பரங்கிமலை சர்ச் வளாகத்தில் ஊழியர் படுகொலை
சென்னை:சென்னை அருகே பரங்கிமலை மீதுள்ள, புனித தோமையர் மலை பேரலாய வளாகத்தில் உள்ள புத்தக விற்பனைநிலையத்தில் பணியாற்றி வந்த ஜேக்கப் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள புனித தோமையர் மலையில் உள்ள பேராலயம் மிகவும் பிரபலமானது. இயேசு நாதரின்சீடரான புனித தோமையர் இங்கு அமர்ந்து உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த மலை மீது பேரலாயம்ஒன்றும் உள்ளது.
பேராலய வளாகத்தில் புத்தக விற்பனை நிலையம் உள்ளது. இங்கு ஜேக்கப் என்பவர் மேலாளராக பணியாற்றிவந்தார். நேற்று மாலை ஒரு வாலிபர் ஜேக்கப்பைப் பார்க்க வந்துள்ளார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த நபர் திடீரென ஜேக்கப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அந்த நபர் தன்னிடமிருந்த கத்தியைஎடுத்து ஜேக்கப்பை சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வேலைக்காரப் பெண் லில்லி மேரிபோட்ட கூச்சலால் அங்கு ஏராளமானவர்கள் திரண்டு விட்டனர்.
அனைவரும் சேர்ந்து அந்த நபரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் யாராவது வந்தால் குத்தி விடுவேன் என்று கூறிஅவர் மிரட்டியதால் பயந்து போய் பிடிக்காமல் விட்டு விட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த நபர்படிக்கட்டுகள் வழியாக கீழே ஓடி விட்டார்.
இதைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜேக்கப்பை மீட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜேக்கப் உயிரிழந்தார்.
பரங்கிமலை மீதுள்ள பேராலய வளாகத்தில் நடந்த இந்தக் கொலையால் பரங்கிமலை பகுதியில் பரபரப்புஏற்பட்டது. கொலை செய்யுப்பட்ட ஜேக்கப்புக்கு மனைவி, 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணைநடத்தினர். இந்தக் கொலைக்குப் பின்னணியில் தனிப்பட்ட பகை காரணமாக இருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications