கருணாநிதிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:முதல்வர் கருணாநிதியை மனித வெடிகுண்டு மூலம் தீர்த்துக் கட்டப் போவதாக திருப்பூர் நகராட்சித் தலைவருக்குவந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் நகராட்சித் தலைவர் செல்வராஜுக்கு தபால் அட்டை மூலம் கடிதம் ஒன்று வந்தது. அதில், 786.தமிழ்நாடு போலீஸ் வேலையில் சேர வயது வரம்பை 24லிருந்து 29 ஆக உயர்த்த வேண்டும். இல்லையென்றால்முதல்வர் கலைஞரை டிசம்பர் 6ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளோம், அல்உம்மா, மதானி இயக்கம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸாருக்கு உடனடிாயக தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கடிதத்தைக்கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கடிதம் கோவையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.அதை அனுப்பியவர் யார் என்பது குறித்து விசாரிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications