கேரளாவுக்கு எதிராக இ.கம்யூ ரயில் மறியல்
மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிடிவாதப் போக்குடன் நடந்து வரும் கேரள அரசைக் கண்டித்துமதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதைக் கண்டித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்புவிடுத்திருந்தது.
இதையடுத்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்திற்காக குவிந்தனர். பஸ்நிலையத்திலிருந்து ஊர்வலமாக அவர்கள் ரயில் நிலையத்தை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களைபோலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கேரளத்தில் இடதுசாரி அரசு ஆட்சியில் உள்ளதால் இந்த விவகாரத்தில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்அமைதியாக இருந்து வந்தன. இது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் இந்தப் போராட்டத்தை சிபிஐநடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications