தமிழர் உணவு லாரிகள் மீது ராணுவம் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அனுப்பியஉணவுப் பொருட்கள் அடங்கிய லாரிகள் மீது இலங்கை ராணுவம் ராக்கெட்குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இனிமேல் பேச்சு கிடையாது என விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளநிலையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள்வெடித்துள்ளன.

இந்த நிலையில், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில்,விடுதலைப் புலிகள் அனுப்பிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கியலாரிகளை ராணுவம் தாக்கி நிறுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்துப்பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்காக 60 லாரிகளில்உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விடுதலைப் புலிகள் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த லாரிகளை உள்ளே விடாமல் தடுத்த ராணுவம், அவற்றின் மீது ராக்கெட்குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. ஆனால் விடுதலைப் புலிகள் பதில்தாக்குதலில் ஈடுபடவில்லை என புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராசய்யாஇளந்திரையன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+