அய்யர் மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமா
கும்பகோணம்:8 கோடி தமிழர்களை அவமதிக்கும் வகையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை வரவேற்று தனது மகள்திருமணத்தில் கலந்து கொள்ளச் செய்த செயலுக்காக மத்திய அமைச்சர் மணி சங்கர அய்யர் மன்னிப்பு கேட்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழர்களை கொன்று குவிக்க சிங்களப்படையினருக்க உத்தரவிட்டு விட்டு இந்தியாவுக்கு வந்துள்ள ராஜபக்ஷேவை இந்திய அரசு வரவேற்றுள்ளது.
இது உலகத் தமிழர்களையும், 8 கோடி தமிழகத் தமிழர்களையும் அவமதிக்கும், கேவப்படுத்தும் செயலாகும்.மேலும், மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரும் ராஜபக்ஷேவை வரவேற்றுள்ளார். இது தமிழர்களைஅவமானப்படுத்தும் செயலாகும்.
இந்த செயலுக்காக தமிழர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட இந்தியா முடிவு செய்துள்ளதாகதெரிகிறது. அப்படி ஒரு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் மிகப் பெரிய கடுமையான போராட்டத்தைமத்திய அரசு சந்திக்க நேரிடும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக டிசம்பர் 4ம் தேதி நாகர்கோவிலில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தும் வரை கேரள மாநிலத்திற்கு அத்தியாவசியப் பொருட்களைகொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications