வசுந்தரா கொடுத்த பச்சக்.. பிரச்சனை குபுக்
டெல்லி:ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. அவர் எதைச் செய்தாலும்பிரச்சனையாகிவிடுகிறது.
ராஜ வம்சத்து பெண்ணான வசுந்தராவும் இந்திய பயோ-டெக்னாலஜி தொழில்துறையின் ராணியான கிரன்மசூம்தாரும் ஒரு நிகழ்ச்சியில் மெளத் கிஸ் கொடுத்து அன்பைப் பரிமாறியது இப்போது பிரச்சனையாகியுள்ளது.
மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த இருவரும் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேருக்கு நேர்சந்தித்தபோது கை கோர்த்துக் கொண்டு, கட்டிப் பிடித்துக் கொண்டனர். அப்படியே இருவரும் இதழோடு இதழ்பதித்து ஒரு பச்சக் கொடுத்துக் கொண்டனர்.
வெஸ்ட்டர்ன் கலாச்சாரப்படி அவர்கள் அதை சர்வசாதாரணமாக செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கபோய்விட்டாலும் இந்த லிப்-டு-லிப் விவகாரம் குபுக் என பிரச்சனையாகிவிட்டது.
சமீபத்தில் ஆடை அலங்கார நிகழ்ச்சியில் மேடையில் தானும் பேஷன் உடை அணிந்து கேட் வாக் செய்துபிரச்சனையில் மாட்டினார் வசுந்தரா. இப்போது உம்மா விஷயத்தில் மாட்டியுள்ளார்.
கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி ரொம்பவே பேசும் பாஜகவுக்கு வசுந்தராவின் செயல் ஆத்திரத்தைத் தந்தாலும்இதுவரை அவரை கண்டிக்கவில்லை. ஏன் கண்டிக்கலை என்பதையே ஒரு பிரச்சனையாக்க முயன்று வருகிறதுகாங்கிரஸ்.
உம்மாவிலும் அரசியலாப்பா...












Click it and Unblock the Notifications