சென்னை-நைஜீரிய பெண்ணுக்கு அரிய ஆபரேஷன்
சென்னை:நைஜீரியாவைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு சென்னை மருத்துவனையில் மிகவும் அரிய இருதய அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்தவர் டாங்கோ அஷாபி குதிரத். இவருக்கு சிறு வயதிலிருந்தே இதயத்தில் பிரச்சினைஇருந்தது. இவரது இருதய குழாய்களில் ரத்தம் சரியான பாதையில் போகாமல், மித்ரல் வால்வ் பகுதியில் கசிவுஏற்பட்டு, அந்தக் குழாய் சுருங்கிக் காணப்பட்டது.
இதன் காரணமாக வழக்கமான அளவை விட ஐந்து மடங்கு பெரியதாக குதிரத்தின் இதயம் காணப்பட்டது.இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வந்தன. மேலும் அவரது நுரையீரலில் நீர்தேங்கியும் பிரச்சினை ஏற்பட்டது.
உடனடியாக அவரது மித்ரல் வால்வ் குழாயை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்துகுதிரத்தை பரிசோதித்துப் பார்த்த அவரது உறவினரும், இங்கிலாந்து மருத்துவருமான டாக்டர் இத்ரிஸ் யெக்கினி,சென்னையில் உள்ள ஹார்வி சூப்பர் ஸ்பெஷாலிட்டிஸ் மருத்துவமனைக்கு குதிரத்தை அனுப்பி வைத்தார்.
குதிரத்திற்கு இதயக் குழாய் திருத்த அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் நரேஷ்குமார் தலைமையிலானடாக்டர்கள் குழு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த இந்த அறுவைச்சிகிச்சையின்போது ரத்தக் கசிவு ஏற்பட்ட மித்ரல் வால்வ் குழாய் அகற்றப்படாமல், ரிப்பேர் செய்து சரிசெய்யப்பட்டது.
மித்ரல் வால்வடோமி, பாப்பில்லடோமி, ரிங் அன்னுலோபிளாஸ்டி ஆகிய முறைகள் மூலம் கசிவு ஏற்பட்டிருந்தமித்ரல் வால்வ் சரி செய்யப்பட்டதாக டாக்டர் நரேஷ்குமார் தெரிவித்தார். இது மிகவும் அரிய வகை அறுவைச்சிகிச்சை என்றும் கூறிய அவர், மித்ரல் வால்வ் குழாயை அகற்றி புதிய குழாயை பொருத்தினால் எதிர்காலத்தில்குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டி வரும்.
அதனால்தான் பழுதடைந்த குழாயை சரி செய்ய முடிவு செய்தோம் என்றார். குதிரத் தற்போது பூரணமாகசரியாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications