கேரள அரண்மனை மீட்பு போர்: 43 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தக்கலை:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரள அரசுக்குச் சொந்தமான பத்மநாபபுரம்அரண்மனையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ச் சான்றோர் பேரவையைசேர்ந்த 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க கேரள அரசு மறுத்துவருவதைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள கேரள அரசுக்குச் சொந்தமானசொத்துக்களை மீட்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்ச் சான்றோர் பேரவைஅறிவித்திருந்தது.

அதன்படி முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரள அரசுக்குச்சொந்தமான பத்மநாபபுரம் அரண்மனையை மீட்கும் போராட்டத்தில் பேரவையின்தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையில் போராட்டம் நிடந்தது.

தக்கலை தாசில்தார் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்துவது தொடர்பானஉச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

நெய்யாற்றின் இடது கரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும்.பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிப் பார்க்க வசூலிக்கும் கட்டணத்தைஉயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என கோரி கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் அரண்மனையை நோக்கி ஊர்வலமாக செல்ல முற்பட்டதால்போலீஸார் தடுத்து கைது செய்தனர். கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டஅனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+