மீண்டும் திகார் சிறையில் சிபு சோரன்
டெல்லி:நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள்மத்திய அமைச்சர் சிபு சோரன் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.அவருக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை குறித்த விவரம் நாளைஅறிவிக்ப்படவுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரன், தனது உதவியாளர் சசிநாத் ஜாவை கடந்த 1994ம் ஆண்டு கொலை செய்தவழக்கில் குற்றவாளி என டெல்லி நீதின்றம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து சிபுகைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதால் உடனடியாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு வழங்கப்படவிருந்த தண்டனையைநீதிமன்றம் அறிவிக்க இயலவில்லை. சிபு சோரன், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல்இருப்பதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று உடல் நலம் தேறி சிபு மீண்டும் திகார் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.அப்போது அவருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கும்.












Click it and Unblock the Notifications