எம்ஜிஆர் சிலை-100 பேருடன் ஜெ டெல்லி பயணம்
சென்னை:டெல்லியில் வருகிற 7ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் 100 பேர் கொண்ட அதிமுக குழு விமானம் மூலம் 6ம் தேதிடெல்லி செல்கிறது.
அதே போல முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை 8ம் தேதி திறக்கப்படுவதையொட்டிமுதல்வர் கருணாநிதியு 7ம் தேதி டெல்லி செல்கிறார்.
எம்ஜிஆர் சிலையை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும் மாறன் சிலையை பிரதமர் மன்மோகன் சிங்கும் திறந்துவைக்கின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்ற வளாகத்தில எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சி வருகிற 7ம் தேதி காலை 10.30 மணியளவில்நடைபெறவுள்ளது. அதில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தலைமைக் கழகநிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், பிற மாநில கழகச்செயலாளர்கள், முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 100 பேர் 6ம் தேதி சென்னையிலிருந்துவிமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள்.
7ம் தேதி நிகழ்ச்சியை முடித்து விட்டு அன்றைய தினமே டெல்லியிலிருந்து அனைவரும் விமானம் மூலம்சென்னை திரும்புகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications