சில்மிஷ பாதிரியார் எஸ்கேப்-போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சிறுமிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதராக சர்ச்சையில் சிக்கியுள்ள பாதிரியார் தலைமறைவாகி விட்டார்.அவரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள், பெண்கள்காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் போபர்ஸ் ஜெயராஜ். 60 வயதாகும் இவர் ஒரு பாதிரியார்.அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் உள்பட பல சிறுமிகளை தனது வீட்டுக்குள்அழைத்துச் சென்று தனது காம வெறியைக் காட்டியதாக ஜெயராஜ் மீது மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் சகாயமேரி என்பவர் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீஸார்விசாரணை நடத்துவதற்காக பாதிரியார் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அவர் வீட்டைப் பூட்டி விட்டுகுடும்பத்துடன் அவர் ஓடி விட்டார்.

அவரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பரங்கிமலை போலீஸ்நிலையம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடந்த 10வருடங்களாக ஜெயராஜ் இங்கு வசித்து வருகிறார். அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது. ஆனால் மனைவியைவிட்டு விட்டு கிரேஸி என்ற பெண்ணை 2வதாக கல்யாணம் செய்து கொண்டு இங்கு குடும்பம் நடத்தி வந்தார்.

பேய்களை விரட்ட, தேர்வில் வெற்றி பெற, நோய்களைக் குணப்படுத்துவதாக கூறி அவர் ஜெபம் செய்வதாககூறுவார். ஆனால் அதை வைத்துக் கொண்டு அவர் செக்ஸ் திருவிளையாடலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பேத்தி வயதே உடைய பல சிறுமிகளை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று செக்ஸ் சில்மிஷங்கள்செய்துள்ளார். இதை வெளியே சொல்லக் கூடாது என்று எச்சரித்து அவர்ககளுக்கு 5 ரூபாய் கொடுத்து அனுப்பிவிடுவார்.

இதையும் மீறி வீட்டில் சொல்லப் போவதாக கூறும் சிறுமிகளிடம் அப்படிச் சொன்னால் நீ நரகத்திற்குத்தான்போவாய் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன குழந்தைகள் சொல்லாமல் விட்டு விட்டனர்.

தனது மகளை பலவந்தப்படுத்தியது குறித்து சகாயமேரி போய்க் கேட்டபோது, உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. மீறி ஏதாவது பிரச்சினை செய்தால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

ஆனால் சகாயமேரி பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே போலீஸார் விசாரணைக்காகஅழைத்துச் சென்றனர். ஆனால் அடுத்த நாளே அவர் வெளியே வந்து விட்டார். இதையடுத்தே அவரேஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இப்போது தலைமறைவாகி விட்டதாக கூறுகிறார்கள்.

ஜெயராஜ் போன்ற காமக் கொடூரர்களை சும்மா விடக் கூடாது. அவரைப் பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+