இட ஒதுக்கீடு அறிக்கை-தாக்கல் செய்ய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தஅறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல்செய்யப்பட்டது. இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இம்மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின்ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக்குழு ஆய்வு செய்து கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் அந்தஅறிக்கையை தாக்கல் செய்தது.

இந் நிலையில், இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அரிஜித் பசாய்ததலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,இட ஒதுக்கீடு மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்குஉத்தரவிட்டனர். அறிக்கையை தாக்கல் செய்ய 6 வார கால அவகாசமும் அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+