போலி கார்டுகள் மூலம் ஏடிஎம்மில் பணம் திருட்டு
சென்னை:போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தைத் திருடிய இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு ஒருவர் வந்தார்.அவரிடம் வெள்ளை நிறத்தில் பல டெபிட் கார்டுகள் இருந்தன. ஒரு கார்டைப் போட்டு ரூ. 15,000 பணம்எடுத்தார். தொடர்ந்து ஒவ்வொரு கார்டாக போட்டு அவர் பணம் எடுக்க முயன்றார்.
இதை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த காவலாளிக்கு சந்தேகம் வந்தது. உடனடியாக உள்ளே போய்அந்த நபரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் திக்கித் திணறி முரண்பாடாக பேசியுள்ளார்.
இதையடுத்து காவலாளி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார் அந்த நபரிடம்விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வைத்திருந்தது போலி கார்டுகள் எனத் தெரிய வந்தது.
அந்த நபரின் பெயர் ராமகிருஷ்ணன். இலங்கையைச் சேர்ந்தவர். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள்லண்டனில் வசிக்கிறார்கள். வேளச்சேரியில் வீடு வாங்கி அதை வாடகைக்கு விட்டுள்ளார் ராமகிருஷ்ணன்.
லண்டனில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் தொழிலதிபர்களின் டெபிட் மற்றும் கிரெட் கார்டுகளின்எண்களை சில நபர்கள் மூலம் ராமகிருஷ்ணன் சேகரித்துள்ளார். பின்னர் அந்த எண்ணைக் கொண்டு போலியாககார்டுகளைத் தயாரித்துள்ளார்.
இதுபோன்ற போலி கார்டுகளை டெல்லி அல்லது மும்பையில் தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்று போலீசாரிடம்தெரிவித்துள்ளார் ராமகிருஷ்ணன்.
ராமகிருஷ்ணனனோடு சேர்த்து மொத்தம் 4 பேர் இந்த போலி கார்டுகளுடன் சென்னைக்கு வந்துள்ளனர்.நட்சத்திரஹோட்டலில் தங்கி பணம் எடுத்துள்ளனர்.
ராமகிருஷ்ணன் மாட்டியதை அறிந்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications