சித்துவுக்கு 3 ஆண்டு சிறை-ரூ. 1லட்சம் அபராதம்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்:கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், கடந்த 1988ம் ஆண்டு, காரை நிறுத்தும் தகராறில் குர்னாம் சிங் என்பவரைசித்துவும் அவரது நண்பர்களும் சேர்ந்து அடித்து உதைத்தனர். இதில் குர்னாம் சிங் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சித்து உள்ளிட்டோர் மீது பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்,சித்துவை விடுதலை செய்து பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதில் சித்துகுற்றவாளி என உயர்நீதிம்ன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து பாஜக எம்.பியான சித்து தனது பதவியைராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் சித்துவுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி இன்று அறிவித்தார். அதன்படி சித்துவுக்கு 3 ஆண்டுசிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை தீர்ப்பு நிறுத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதனால் சித்து கைது செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+