ஜன. 1 முதல் வாட் அமல்: சட்டம் நிறைவேறியது
சென்னை:தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் மதிப்புக் கூட்டிய வரி (வாட்) விதிப்பு முறை அமலுக்கு வருகிறது.இதுதொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
தமிழகம், புதுவை உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாட் வரிவிதிப்பு முறை அமலாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் வாட் வரியை அமல்படுத்த திமுக அரசுமுடிவு செய்தது.
இதுதொடர்பான சட்ட மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் நேற்று சட்டசபையில் தாக்கல்செய்தார். பின்னர் இதன் மீது விவாதம் நடந்தது. காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் வாட் வரிவிதிப்பைவரவேற்றுப் பேசின. பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், இதை நடைமுறைப்படுத்தும்போது மிகவும்எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வாட் வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாகமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் குறுக்கிட்ட அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கடந்த அதிமுகஆட்சியின்போது நிதியமைச்சராக இருந்த பொன்னையன் வாட் வரி விதிப்பால் என்னென்ன நண்மைகள்ஏற்படும் என்பதை பட்டியலிட்டுச் சொன்னதை சுட்டிக் காட்டினார்.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆற்காடு வீராசாமியின் பேச்சுக்கு பதில் அளிக்கசி.வி.சண்முகம் முயன்றார். ஆனால் சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார். இதைக் கண்டித்து அதிமுகஉறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுகவும் வெளிநடப்புச் செய்தது.
பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 1ம் தேதிமுதல் தமிழகத்தில் வாட் வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications