ஐ.டி. துறையில் ரூ. 80,000 கோடி முதலீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஒன்றரைஆண்டுகளில் ரூ. 80,000 கோடி அளவுக்கு முதலீடுகளை செய்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறைஅமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

சென்னை அருகே பூந்தமல்லியில் டெல் நிறுவனத்தின் தொடக்க விழாவில் தயாநிதி மாறன் பேசுகையில்,இந்தியா, தற்போது தகவல் தொழில் நுட்பத்துறை முதலீடுகளின் மையமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ. 22,500 கோடி அன்னிய வெளிநாட்டு நேரடி முதலீடு கிடைந்துள்ளது. அது தவிர இந்தியநிறுவனங்களில் ரூ.9,000 கோடியை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

2005-2006ம் ஆண்டில், தகவல் தொழில்நுட்ப துணைத் தொழில் துறையின் மூலம் ரூ. 28,350 கோடி ஏற்றுமதிவருமானம் கிடைத்துள்ளது. இது 2001-2002ம் ஆண்டை விட 4 மடங்கு அதிகம்.

பிபிஓ துறையின் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் எனதுஅமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட 10 அம்ச கொள்கைத் திட்டத்தின் முக்கிய நோக்கம், உலக அளவில்போட்டித்திறன் மிக்க ஹார்டுவேர் தயாரிப்புத்துறையை இந்தியாவில் உருவாக்குவதும் அதன் மூலம் அந்நியநேரடி முதலீடுகளை ஈர்ப்பதும் அதன் முக்கிய நோக்கம்.

இன்டெல், சிஸ்கோ, மைக்ரோசாப்ட், மோட்டரோலா, எரிக்சன், நோகியா, கியோசிரா, சீமன்ஸ், எல்ஜி, சாம்சாங்மற்றும் இதர நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை உருவாக்க வந்தவண்ணம் உள்ளன. கடந்தஒன்றறை ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ. 80,000 கோடி முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளன.

தகவல் தொழில் நுட்பத்துறைக்கு முற்றிலும் வரிவிலக்கு பெற நிதி அமைச்சகத்தின் உதவிக்கு முயற்சிகள்மேற்கொண்டு வருகிறேன். 2009 மார்ச் மாதத்திற்குப் பிறகு தகவல் தொழில் நுட்ப துணைத் துறைகளுக்கும்முற்றிலும் வரிவிலக்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+